டிசம்பருக்குள் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும்,கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில்2 லட்சம் பேர் கூடுதலாகஅரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்றும், அது போன்ற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.